(24 X 7)ஜெபம்

ஆன்லைன் ஜெபம், 24 மணிநேர ஜெபம், தொலைபேசி ஜெபம் என்று கூறுகிறார்களே அது பற்றி சற்று விளக்கவும்!

தேவன் (அல்லாஹ்வுடைய) விசுவாசியின் பதில்

ஜெபம் என்பது என்ன என்று கிருத்தவர்களுக்கு கற்றுத்தர வேண்டிய அவலநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதை நினைக்கும்போது மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது.

ஜெபம் என்பது என்ன?

ஒரு மனிதன் துன்பத்தில் சிக்கித்தவிக்கும்போது  உதவக் கூடிய சகாக்கள் எல்லோரும் கைகவிட்டுவிடுவார்கள் அப்படிப்பட்ட நேரத்தில் படைத்த ஆண்டவன் உதவுவான் என்று கருதி அவனிடம் தன் குறைகளை எடுத்துக்கூறுவது ஜெபம் எனப்படும்!

 

எவ்வாறு ஜெபம் மேற்கொள்வது! அதற்கான வரைமுறை என்ன?

ஜெபம் மேற்கொள்வதற்கும் ஒரு வரைமுறையை ஆண்டவன் வகுத்துள்ளான் அதை பைபிள் பின்வருமாறு விளக்குகிறது!

அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்க வேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். (மத்தேயு அதிகாரம் 6:5-8)

ஜெபம் என்பது அந்தரங்கமாக இருக்கவேண்டும் என்று பைபிள் கூறுகிறது ஆனால் கிருத்தவ போதகர்களோ இதை மக்கள் மத்தியில் சரியாக கொண்டு போய் சேர்க்கவில்லை. இதனால் பல்வேறு பின்விளைவுகள் ஏற்பட்டு கிருத்தவ சகோதர சகோதரிகள் ஜெபம் என்ற ஒரு வணக்கத்தின் மூலம் அதிகமாக சுரண்டப்படுகிறார்கள். வாருங்கள் பைபிளின் இந்த வசனத்தை சற்று அலசுவோம்!

நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்க வேண்டாம்;

ஜெபம் பண்ணும்போது மாயக்காரனைப் போன்று இருக்காதே என்று பைபிள் கூறுகிறது அதாவது மாயக்காரன் தனது மாய வித்தைகளை மக்கள் கூடும் பகுதியில் அவிழ்த்துவிடுவான் அப்படிப்பட்ட நேரத்தில் தன்னுடைய மாயவித்தைகளை காட்டுவதற்காக சில பொய்யான தகவல்களை எடுத்துவைப்பான். இவனைப் போன்று பொய்யனாக ஜெபத்தில் இருக்கக்கூடாது என்ற பைபிள் கூறுகிறது!

மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ஆம் இந்த வசனம் கூறுவது 100க்கு 100 கிருத்தவர்களால் அரங்கேற்றப்படுகிறது. அதாவது மனுஷர்கள் காணவேண்டும் என்பதற்காகவே இன்றைய கிருத்தவ போலி போதகர்கள் ஜெபம் செய்கிறார்கள்.

பல இலட்சங்கள் செலவு செய்து பொதுமேடைகளை அமைத்து பிறவிக் குருடனை குணப்படுத்துகிறேன், சப்பானியை நடக்க வைக்கிறேன், செவிடனை கேட்கவைக்கிறேன் என்ற பொய்யான வாக்குறுதிகளை ஜெபத்தின் பெயரால் அரங்கேற்றுகிறார்கள். இப்படிப்பட்ட ஜெபத்தினால் உங்கள் பகுதியிலுள்ள 1 மாற்றுத் திரணாளியாவது குணமடைந்ததுண்டா? நீங்கள் சுத்தமான இருதயமுள்ளவராக இருந்தால் சிந்தித்துப்பாருங்கள் மக்கள் முன் அரங்கேற்றப்படும் ஜெபங்கள் வீண் பகட்டு மேனிக்கு செய்யப்படும் ஜெபங்கள் இல்லையா?

ஒரு கிருத்தவன் எவ்வாறு ஜெபத்தை எவ்வாறு மேற்கொள்வது!

இதோ ஒரு சுத்தமான இருதயமுள்ளவன் கீழ்கண்டவாறுதான் தன் சேனைகளின் கர்த்தரிடம் ஜெபம் பண்ணி முறையிடுவான், நேர்வழியை கேட்பான்!

நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்

ஜெபத்தில் தவிர்க்க வேண்டியவை என்ன?

இன்றைக்கு கிருத்தவர்கள் அனைவரும் கீழ்கண்ட பைபிள் வரிகளுக்கு உகந்தாற்போன்றே ஜெபம் பண்ணுகிறார்கள். காட்டுக் கூச்சலுடன் அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! என்று கூத்தடிப்பது, ஜீஸஸ் காப்பாத்து! ஜீஸஸ் காப்பாத்து! ஓ காட்! ஓ காட்! என்று கும்மாங்குத்து ஸ்டைலில் கொக்கறிக்கிறார்கள் இது அஞ்ஞானமில்லையா? சுத்தமான இருதயமுள்ள கிருத்தவர்களே உங்கள் ஜெபம் இன்றைக்கு அஞ்ஞான வீண் வார்த்தைகளால் அலைபாய்ந்துக் கொள்டிருக்க வில்லையா? இதோ உங்கள் பைபிள் என்ன கூறுகிறத என்பதை கவனமாக படியுங்கள்!

அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். (6:5-8)

இப்போது உங்கள் கேள்விக்கு வருவோம்!

ஆன்லைன் ஜெபம், 24 மணிநேர ஜெபம், தொலைபேசி ஜெபம் ஆகியவற்றில் கண்ணியம் இருக்கிறதா? யாரோ ஒருவன் உங்களுக்காக ஜெபிக்கிறானாம் அதற்காக நீங்கள் கூலி கொடுக்கிறீர்கள்.

நீங்கள் செய்த பாவத்திற்கும் உங்கள் குடும்ப கஷ்டங்களுக்கும் யாரோ ஒருவன் ஜெபிப்பானா? இது ஜோசியக் காரனுடைய கதை போன்றல்லவா காணப்படுகிறது.

ஒருவன் ஜோசியக்காரனிடம் சென்று குறி கேட்பானாம் அவன் குறி கூறி சொன்னால் குறைகள் நீங்குமாம். அட முட்டாள் மனிதா அந்த ஜோசியக்காரன் தன் குறைகளைக் காண யாரிடம் போய் குறி கேட்பான்?

தொலைபேசி ஜெபம்!

தொலைபேசியில் ஜெபம் செய்கிறோம் என்கிறார்கள் இவர்கள் இதற்கு கட்டணமாக ஜெப ஊழியங்களுக்கு காணிக்கை செலுத்துங்கள் என்று கவர்ச்சிகரமாக பேசி ஒரு கணிசமான பணத்தை கரைக்கிறார்கள். இதுமட்டுமா?

குரூப் ஆசீர்வாத திட்டம், குடும்ப ஆசிர்வாத திட்டம், குழந்தைகள் ஆசிர்வாத திட்டம், கணவன் மனைவி ஆசிர்வாத திட்டம், சக்காளத்தி ஆசிர்வாத திட்டம் என்று கூறி ஒவ்வொரு திட்டத்திற்கும் இவ்வளவு தொகை செலுத்தினால் உங்களுக்காக இரவு பகலாக அயராது ஜெபிக்கிறோம் அடேயப்பா எத்தனை ஏமாற்று திட்டங்கள். இப்படி திட்டங்களில் சேர்ந்து ஜெபித்துக் கொண்டால்தான் தேவன் கருணை காட்டுவானா? ஏன் தேவன் என்ன உங்கள் சொந்த குரளை கேட்காத செவிடனா? உங்கள் குடும்ப கஷ்டத்தை பார்க்காத குருடனா?

இன்றைக்கு தொலைபேசி ஜெபம், நாளை கைபேசி ஜெபம் மறுநாள் டி.வி. ஜெபம், வீட்டுல எளவு விழுந்துவிட்டால் ஒப்பாரி ஜெபம் என்று ஜெபத்தை நாசப்படுத்தியவர்கள் அந்த தேவனிடம் தன்மானத்தை இழந்த மானங்கெட்ட பாதரியார்கள்.

பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். (நீதிமொழிகள் 12:22)

சிந்தித்துப்பாருங்கள் சகோதர சகோதரிகளே! அட்லீஸ்டு 1 ரூபா கொடுத்தாதான் உங்களுக்காக இந்த பொய் உதடுகள் கொண்ட மதகுருமார்கள் ஜெபிப்பார்கள் பணம் இல்லைன்னா உங்க பெயரை தேவன்கிட்ட சொல்லுவாங்களா?

அப்படி பணம் கொடுத்தால்தான் தேவன் பிரார்த்தனையை ஏற்பானா? இது தேவன் மீது இட்டுக்கட்டிய துரோமில்லையா? எனவே ஆன்லைன் ஜெபம், 24 மணிநேர ஜெபம், தொலைபேசி ஜெபம் என்று கூறுகிறார்களே இதுவெல்லாம் சுத்த மோசடி.

நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார். (பைபிள்)

தேவனை பிரார்த்தியுங்கள் மாறாக கிருஸ்துவை அல்ல!

நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். (பைபிள்)

ஏசு என்ற தீர்க்கதரிசி ஒரு முஸ்லிம் எனவே இஸ்லாம் எனும் சத்திய சன்மார்க்த்தின் பக்கம் திரும்புங்கள்

விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான், மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான். (நீதிமொழிகள் 13:16)

One thought on “(24 X 7)ஜெபம்

Leave a comment