ஏசு-ஸலாம்!

வீட்டிற்குள் புகும் முன்பு ஸலாம் என்ற முகமன் வாழ்த்து கூற ஏசு தன் சீடர்களை அறிவுறுத்தினார்

(மத்தேயு எழுதிய சுவிசேஷம் 10)

(12) நீஙகள் அவர் வீட்டினுள் நுழையும்பொழுது ‘உங்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்’ என்று சொல்லுங்கள்.

 

(13) அவ்வீட்டில் உள்ளவர்கள் உங்களை வரவேற்றால், உங்கள் சமாதானத்திற்கு அவர்கள் தகுதியுள்ளவர்கள். நீங்கள் அவர்களுக்கு விரும்பிய சமாதானம் அவர்களுக்குக் கிடைக்கட்டும். வீட்டிலுள்ளவர்கள் உங்களை வரவேற்காவிட்டால், உங்கள் சமாதானத்திற்கு அவர்கள் தகுதியுள்ளவர்களல்ல. அவர்களுக்கு நீங்கள் விரும்பிய சமாதானத்தைத் திரும்பப் பெறுங்கள்.

 

(14) ஒரு வீட்டிலுள்ளவர்களோ அல்லது நகரத்திலுள்ளவர்களோ உங்களை வரவேற்கவோ அல்லது உங்கள் பேச்சைக் கேட்கவோ மறுத்தால், அவ்விடத்தை விட்டு விலகுங்கள். உங்கள் கால்களில் படிந்த தூசியைத் தட்டிவிடுங்கள்.

 

(15) நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். நியாயத்தீர்ப்பு நாளிலே சோதாம் மற்றும் கொமோரா ஆகிய ஊர்களுக்கு நேர்ந்ததைக் காட்டிலும் மோசமானது அவ்வூருக்கு நடக்கும்.

ஏசு இறைவனுடைய தூதுர்தான் என்பதற்கு இந்த ஸலாம் என்ற முகமன் ஆதாரமாக உள்ளது ஏனெனில்  ஏசுவுக்கு முன் வந்த அனைத்து நபிமார்களும் ஸலாம் என்ற முகமனை கூறியுள்ளார்கள்! இறுதி நபியும் ஸலாம் கூறினார் எனவே ஏசு என்கிற எங்கள் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அல்லாஹ்வின் உண்மையான அடிமை என்பதற்கு இந்த ஸலாம் முகமன் ஆதாரம்!

Leave a comment