கேள்வி
பைபிளில் இயேசு சிலுவையில் அறையப்பட்டதை ஏற்கலாமா?
பதில்:
தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள். (பைபிள் II பேதுரு 1:21)
இறைவனிடமிருந்து அனுப்பப்பட் தூதர்கள் இறைச் செய்தியை தன் சமுதாயத்தவர்களுக்கு அறிவிப்பார்கள் அவ்வாறு அறிவிக்கக்கூடிய செய்திகள் இறைவனின் வார்த்தகளாக இருக்கும் அவ் வார்த்தைகளில் அர்த்தமும் இருக்கும் ஆனால் அப்படிப்பட்ட நிலையில் இறைவனின் வார்த்தைகளை போதிக்கும் ஒருவர் இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட இறைவனின் தூதுவர்களாக இருப்பார்கள் அவர்களுக்கு உதாரணமாக ஒரு சில இறைத்தூதர்களை கூறலாம்!
- ஆபிரகாம் – இப்ராஹிம் (அலை)
- நோஹா – நூஹு (அலை)
- மோசஸ் – மூஸா (அலை)
- தாவீது – தாவுத் (அலை)
- சாலமோன் – சுலைமான் (அலை)
- இயேசு – ஈஸா (அலை)
- அஹமது – முஹம்மது (ஸல்)
இறைத்தூதர்கள் அனைவரும் இறைச் செய்திகளை கொண்டு வந்தார்கள் அவர்களில் அதிகமாக வேதங்களில் பெயர் குறிப்பிடப்பட்ட மேற்கண்ட நபிமார்கள் எனும் இறைத்தூதர்கள் தங்கள் சமுதாயத்த வர்களுக்கு அறிவித்ததே இறைச் செய்தி மேலும் அந்த இறைச் செய்திகளின் தொகுப்பே இறை வேதமாகும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் பைபிள் இறை வேதமாகுமா? என்றால் அது இறை வேதம் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை!
இறைவேதம் என்றால் என்ன?
ஒரு சமுதாயத்திற்கு நன்மையை நாட எண்ணினால் அச் சமுதாயத் தவர்களுக்கு இறைவன் பல்வேறு சோதனைகளை கொடுத்து சோதிப்பான் அவ்வாறு சோதிப்பதற்கு அவருடன் இறைத்தூதர் ஒருவர் வரவேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு இறைத்தூதர் தன் இறைவனிடமிருந்து பெறக்கூடிய தீர்க்க தரிசனங்களை தன் சமுதாயத்தவர்களுக்கு போதிப்பார் அப்படி போதிக்கம் செய்திகள் அடங்கிய ஒரு தொகுப்பே இறைவேதமாகும். இறை வேதம் என்பது இறைவனின் தூதர் மரணிப்பதற்கு முன் முழுமையடைந்திருக்க வேண்டும் அவ்வாறு முழுமையடைந்த வேதங்களே இறை வேதங்களாகும்.
குர்ஆன் இறை வேதம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்!
அருள்மறை குர்ஆன் இறை வேதம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும் அதற்கான காரணங்கள் கீழே விளக்கப்பட்டுள்ளது
- இறைத்தூதர் செய்தியை மக்களிடம் அறிவிக்க வேண்டும்!
- இறைச் செய்தியை இறைத்தூதர் முன்னிலையில் பாதுகாக்கப்பட வேண்டும்!
- இறைச் செய்திகள் அனைத்தும் முழுவதுமாக உள்ளத்தில் நிறுத்தி அதை மனனம் செய்திருக்க வேண்டும்!
- இறைச் செய்திகள் இறைத்தூதரின் அறிவிப்பின் படி அச்சு பிசகமாமல் இருக்க வேண்டும்!
ஆக முஸ்லிம்களாகிய நாம் படிக்கும், சிந்திக்கும், பின்பற்றும் அருள்மறை குர்ஆன் இந்த அத்தனை அம்சங்களையும் பெற்றிருக்கிறது. ஆக ஒரு இறைவேதத்தில் அந்த சமுதாயத்தின் தீர்க்கதரிசி தாம் கூறிய அனைத்து செய்திகளும் பலமுறை உள்ளத்தில் நிறுத்தி தீர்க்கதரிசி சொல்லாத வார்த்தைகளை அதற்குள் இணைக்கக் கூடாது!
ஒருவேளை இறைவேதத்தில் தீர்க்கதரிசி கூறாத ஒரே ஒரு சொல் அல்லது ஒரே ஒரு வசனம் கண்டறியப்பட்டாலும் அந்த இறைவேதம் சாதாரணமான புத்தகமாகவே கருதப்படும் இப்படிப்பட்ட நிலையில் இறைவேதம் என்பதற்கு அருள்மறை குர்ஆனைப் போன்று எந்த ஒரு வேதமும் இன்று நம்மிடையே இல்லை!
பைபிள் இறைவேதமா?
பைபிளில் இயேசு கூறிய வார்த்தைகளும் உள்ளது அதுபோன்று இயேசு கூறாத வார்த்தைகளும் உள்ளது அது எவ்வாறு இறை வேதமாகும்? குழப்பமாக உள்ளதா? இதைப் பற்றி தெளிவாக உணர்த்துகிறோம்!
இயேசு உயிருடன் இருந்த காலத்தில் அவர் கூறிய செய்திகளை அவருடைய சீடர்களால் தொகுக்கப்பட்டு எழுதப்பட்டது பைபிள் என்கிறார்கள் அப்படியானல் இயேசு மரித்த பின்னர் அவர் சொல்லாத வார்த்தைகளை எவ்வாறு பைபிளில் கொண்டு வந்தார்கள்?
இயேசு சிலுவையில் அறையப்பட்ட செய்திகள் அவர் மரித்த பின்னர் நடந்த சம்பவங்கள் மனிதனால் பைபிளில் இடைச் செறுகப்பட்டு உள்ளது! உதாரணமாக கீழ்க்கண்ட வசனங்கள் உங்கள் பார்வைக்கு சமர்பிக்கிறோம்!
இந்த வசனம் இயேசு கூறிய வார்த்தையா?
அவரைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. (பைபிள் புதிய ஏற்பாடு மத்தேயு 27:35)
மேற்கண்ட வசனத்தில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட செய்தியை கூறுகிறது ஆக இயேசு சிலுவையில் அறையப்பட்டது உண்மையானால் அவர் தன் சுய நினைவை இழந்த நிலையில் மரணித்துள்ளார் அப்படிப்பட்ட நிலையில் இந்த வசனம் இயேசுவினால் கூறப்பட்ட வசனம் அல்ல மாறாக அன்றைய மக்களின் வாய் வழி வார்த்தைகளால் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும் இவ்வாறு இட்டுக்கட்டப்பட்ட செய்தி பைபிளில் இடைச் செருகள் செய்யப்பட்டுள்ளதால் பைபிள் அதன் புனிதத்தை இழந்துவிட்டது அது இறைவேதம் என்ற தகுதியை இழந்துவிட்டது!
அப்பொழுது, அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளர் அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டார்கள். (பைபிள் புதிய ஏற்பாடு மத்தேயு 27:38 )
மேற்கண்ட வசனத்தில் இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக கூறப்பட்ட செய்தியில் அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும் இடது பக்கத்தில் ஒருவனுமனும் இரண்டு கள்ளர்கள் அவரோடு சிலுவையில் அறையப்பட்டதாக அறிவிப்பு வருகிறது.
சிந்திக்க வேண்டியது
இயேசு சுயநினைவை இழந்த பின்பு அவர் அறிவிக்காத இந்த செய்தி இறைச் செய்தியாக கருத இயலுமா? அவ்வாறு இது பைபிளின் புனிதமான வசனம் என்ற கருதினால் இந்த வசனத்தை எழுதியவர் இறைத்தூதரா? இச் செய்தி இயேசுவினால் கூறப்படாத நிலையில் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக திகழ்கிறது.
அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, யூதருடைய ராஜா என்று எழுதி, சிலுவையின் மேல் கட்டினார்கள். (பைபிள் புதிய ஏற்பாடு மாற்கு 15:26)
இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்பு இடம் பெறும் செய்தியை பைபிள் வசனமாக எழுதியுள்ளார்கள் இவர்கள் கூற்றுப்படி இது இறைவசனம் என்றால் அதை இயேசு கூறினாரா? இல்லவே இல்லை மாறாக மனிதர்கள் சுயமாக கற்பனை செய்து எழுதிக் கொண்டதாகவே இந்த வசனம் திகழ்கிறது.
அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார், அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம். (பைபிள் புதிய ஏற்பாடு மாற்கு 16:6)
மேற்கண்ட வசனத்தில் இயேசு மரித்து அடக்கம் செய்யப்பட்ட பிறகு மக்கள் அவரை தேடுவதாக அறிவிப்பு வருகிறது இந்த அறிவிப்பை செய்பவர் மனிதர் ஆக சாதாரண மனிதர்களின் அறிவிப்புகளை இறை வசனம் என்று எழுதிக் கொண்டு அதுதான் பைபிள் இறைவேதம் என்று கூறினால் இவர்களை விட உலகில் முட்டாள்கள் யாருமில்லை!
ஆக பைபிளில் என்னற்ற அனேக வசனங்கள் இயேசுவின் வார்த்தைகளாக அல்லாமலும் அவர் சிலுவையில் அறையப்பட்டு சுயநினைவை இழந்து மரணித்த பின்னரும் (இயேசு இஸ்லாத்தின் நம்பிக்கையின் படி சிலுவையில் அறையப்படவில்லை மற்றும் அவர் மரணிக்கவில்லை இன்றளவும் உயிருடன் உள்ளார்) எழுதப்பட்ட மக்களின் சுய வார்த்தைகளே ஆக பைபிள் இறைவேதம் அல்ல என்பதற்கு இந்த சில வசனங்களே போதுமானதாகும்.
அன்புடன்
சிராஜ்அப்துல்லாஹ்