சிலை, சிலுவையா?

கிருத்தவ பந்துக்களே! ரத்த பந்தங்களே சிலை வணக்கம் பைபிள் வேதத்தில் தடைசெய்யப்பட்டுள்ளதே? உணரமாட்டீர்களா?

சிலை

 

சற்று இறைவனின் வார்த்தைகளைக் கேளுங்கள்.

உங்கள் இறைவன் எதை வேண்டாம் என்று கட்டளையிடுகிறானோ அதைத்தானே தாங்கள் பின்பற்றுகிறீர்கள். சிலை வணக்கம் கூடாது என்று தன் வேதாகமத்தில் குறிப்பிடும் இறைவனுக்கு மாற்றமாக ஏசுநாதரையும், மரியாளையும், சிலுவையையும், இன்னும் மனிதர்களில் சிலர் சிலரையும் கல்லாக வழிபடுகிறீர்களே இது நியாயமா? உங்கள் வேதத்திலேயே உங்கள் இறைவன்

 

ஏசாயா 44:9 (Isaiah 44:6,9-20)9.

விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அதறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளா யிருக்கிறார்கள்.4. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. 

 

சங்கீதம் 115:3-8 (Psalms 115:3-8)

 3. அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.

  

5. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.

 

6. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.

 

7. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கி றார்கள்.

 

அன்புள்ள என் அருமைச் சகோதரர்களே நீங்கள் முதலில் சிலை வணக்கங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள் உங்களால் உங்கள் ஜீவனை நஷ்டப்படுத்தாதீர்கள் இதை நாம் சொல்லவில்லை பைபிள் சொல்கிறது.

 

மாற்கு 8:36,37 (Mark 8:36,37)

 

36. மனுஷன் உலகம் முழுவதையும் தாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப் படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

 

37. மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?