தேவ இராஜ்யம்

தேவன் என்கிற அல்லாஹ்வின் தேவ இராஜ்யத்திற்கு முதலிடம்

தேவ இராஜ்யத்திற்கு முதலிடம் கொடுக்க ஏசுவின் அறிவுரை ஏசு தன் தேவனாகிய பரமபிதாவைப் பற்றி மக்கள் அறிந்துக்கொள்ளவே தம் வாழ்நாளைக் கழித்தார். அதுசமயம் மக்கள் அனைவரும் விக்ரஹங்களையும் மற்ற மற்ற தெய்வ வழிபாடுகளையும் மேற்கொண்டு பரமபிதா (இறைவன்)வை மறந்து வாழ்ந்து வந்தனர். அதை பற்றி எச்சரிக்கவும் தேவ இராஜ்யத்திற்கு அதாவது உலகை படைத்து பரிபாலித்து வரும் இறைவனாகிய அல்லாஹ்வை பின்பற்றுமாறு மக்களுக்கு ஆணை பிறப்பித்தார். இதையே மத்தேயு எழுதிய சுவிசேஷம் 6 என்ற இந்த பாடம் விளக்குகிறது. ஏசு என்றழைக்கப்படும் எங்கள் ஈஸா (அலை) என்ற இறைத்தூதர் மக்களிடம் அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய இராஜ்யத்தைப் பற்றியும் எத்திவைக்கும் பைபிள் வசனங்கள் இதோ! தேவ இராஜ்யத்திற்கு முதலிடம்

25 “எனவே, நான் சொல்கிறேன், நீங்கள் உயிர்வாழத் தேவையான உணவிற்காகக் கவலை கொள்ளாதீர்கள். உங்கள் உடலுக்குத் தேவையான உடைக்காகவும் கவலைகொள்ளாதீர்கள். உணவைவிடவும் முக்கியமானது ஜீவன். உடையைவிடவும் முக்கியமானது சரீரம்.

 

26 பறவைகளைப் பாருங்கள். அவைகள் விதைப்பதோ அறுவடை செய்வதோ களஞ்சியங்களில் சேமித்து வைப்பதோ இல்லை. ஆனால் உங்கள் பரலோகப் பிதா அவைகளுக்கு உணவளிக்கிறார். பறவைகளை காட்டிலும் நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என நீங்கள் அறிவீர்கள்.

27 கவலைப்படுவதினால் உங்களால் உங்கள் வாழ்நாளைக் கூட்ட இயலாது.

28 “உடைகளுக்காக ஏன் கவலை கொள்கிறீர்கள்? தோட்டத்தில் உள்ள மலர்களைப் பாருங்கள். அவை எப்படி வளர்கின்றன என்பதைப் பாருங்கள். அவைகள் வேலை செய்வதுமில்லை. தங்களுக்கான உடைகளைத் தயார் செய்வதுமில்லை.

 

29 ஆனால் நான் சொல்கிறேன் மாபெரும் பணக்கார மன்னனான சாலமோன் கூட இந்தப் பூக்களில் ஒன்றைப்போல அழகாக உடை அணியவில்லை.

 

30 “அவ்வாறே தேவன் வயல்களிலுள்ள புற்களுக்கும் உடை அணிவிக்கிறார். இன்றைக்கு உயிருடன் இருக்கும் புல், நாளைக்கு தீயிலிடப்பட்டு எரிக்கப்படும். எனவே, தேவன் உங்களுக்குச் சிறப்பாக உடையணிவிப்பார் என்பதை அறியுங்கள். தேவனிடம் சாதாரணமான நம்பிக்கை வைக்காதீர்கள்.

31 ‘உண்பதற்கு என்ன கிடைக்கும்?’ அல்லது குடிப்பதற்கு என்ன கிடைக்கும்?’ அல்லது உடுப்பதற்கு என்ன கிடைக்கும்?’ என்று கவலைகொள்ளாதீர்கள்.

 

32 தேவனை அறியாத மக்களே இவற்றைப் பெற முயற்சிக்கிறார்கள். நீங்களோ கவலைப்படாதீர்கள், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா இவைகள் உங்களுக்குத் தேவை என்பதை அறிவார்.

 

33 தேவனின் இராஜ்யத்தையும் நீங்கள் செய்ய வேண்டுமென தேவன் விரும்பும் நற்செயல்களைச் செய்தலையுமே நீங்கள் நாடவேண்டும். அப்போது தேவன் உங்களது மற்றத் தேவை களையும் நிறைவேற்றுவார்.

34 எனவே, நாளையைக் குறித்துக் கவலைகொள்ளாதீர்கள். ஒவ்வொரு நாளும் தொல்லை உண்டு. நாளையக் கவலை நாளைக்கு.

ஆனால் ஏசுவை மக்கள் தேவ குமாரனாக நினைக்கவில்லை மாறாக தாவீதின் குமாரன் என்றும் போதகர் என்றும்தான் எண்ணி வந்தார்கள் ஆனால் காலப்போக்கில் கிருத்தவத்தை ஏற்ற மாற்றுமதத்தவர்கள்தான் ஏசுவை தேவனின் குமாரர் என்று கூறி இழிவுபடுத்த ஆரம்பித்தனர் இதற்கான ஆதாரம் கிருத்தவ பைபிளில் மத்தேயு எழுதிய சுவிசேஷம் 9 அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் கிருத்தவ பந்துக்கள்தான் இதை ஏற்க மறுக்கின்றனர்.